சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாவமும் பழி பற்று அற
பண் - திருக்குறுந்தொகை   (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=VY4akPi1XfY

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.099   பாவமும் பழி பற்று அற  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்!
காவலாளன் கலந்து அருள்செய்யுமே.

[1]
கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?
ஒங்கு மாகடல் ஓதம் நீராடில் என்?
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

[2]
பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்?
இட்டும் அட்டியும் ஈதொழில் பூணின் என்?
எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்?
இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.

[3]
வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்?
நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில் என்?
ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே.

[4]
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்?
வேலை தோறும் விதிவழி நிற்கில் என்?
ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்?
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.

[5]
கானம், நாடு, கலந்து திரியில் என்?
ஈனம் இன்றி இருந் தவம் செய்யில் என்?
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்?
ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே.

[6]
கூட வேடத்தர் ஆகிக் குழுவில் என்?
வாடி ஊனை வருத்தித் திரியில் என்?
ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனைப்
பாடலாளர்க்கு அல்லால், பயன் இல்லையே.

[7]
நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்?
குன்றம் ஏறி இருந் தவம் செய்யில் என்?
சென்று நீரில் குளித்துத் திரியில் என்?
என்றும், ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.

[8]
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை-
ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல்,
ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே.

[9]
மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்?
பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக்
குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி
பற்று இலாதவர்க்குப் பயன் இல்லையே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list