சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.099
திருநாவுக்கரசர்
தேவாரம்
பாவமும் பழி பற்று அற பண் - திருக்குறுந்தொகை (பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=VY4akPi1XfY |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.099  
பாவமும் பழி பற்று அற
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -பாவநாசத் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்! ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்! காவலாளன் கலந்து அருள்செய்யுமே. | [1] |
கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்? ஒங்கு மாகடல் ஓதம் நீராடில் என்? எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே. | [2] |
பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்? இட்டும் அட்டியும் ஈதொழில் பூணின் என்? எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்? இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே. | [3] |
வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்? நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்? ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில் என்? ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே. | [4] |
காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்? வேலை தோறும் விதிவழி நிற்கில் என்? ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்? ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே. | [5] |
கானம், நாடு, கலந்து திரியில் என்? ஈனம் இன்றி இருந் தவம் செய்யில் என்? ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்? ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே. | [6] |
கூட வேடத்தர் ஆகிக் குழுவில் என்? வாடி ஊனை வருத்தித் திரியில் என்? ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனைப் பாடலாளர்க்கு அல்லால், பயன் இல்லையே. | [7] |
நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்? குன்றம் ஏறி இருந் தவம் செய்யில் என்? சென்று நீரில் குளித்துத் திரியில் என்? என்றும், ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே. | [8] |
கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை- ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல், ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே. | [9] |
மற்று நல்-தவம் செய்து வருந்தில் என்? பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இறக் குற்ற, நல் குரை ஆர் கழல், சேவடி பற்று இலாதவர்க்குப் பயன் இல்லையே. | [10] |